Tuesday 28 April 2015

வித்தைக்காரனின் விரல்.


கற்சுறா


மிகச்சிரமப்பட்டு
தொங்கிக் கொண்டிருக்கும் அந்தச் சட்டகத்திற்குள்
என்னைப் புகுத்துகிறாய்.

நாலு மூலைகளிலும் ஆணிகளால் மட்டுமே அறையப்பட்டிருக்கிறது அது.
ஒரு புகைப்படக் கலைஞனின் கைவிரலைப் பார்த்த கண்கள் என்னுடையது..

நீ மிரளாதே.

நான் உன்னைப் பார்க்கவில்லை.
ஒளிவில்லையைத் திறந்து மூடும் கணத்தில் அவன் என்னை வேறு எங்கும் பார்க்க விடவில்லை.
வில்லைக்குள் கண்கள் குவிய
உலகை கண்ணுக்குள் உருட்டும் அதிசயமாய் இருந்தான் அவன்.

தன்னுடைய விரலைக் காட்டி என்னைக் குவித்தான்.

அவனது சுட்டுவிரலை மட்டுமே நான் பார்த்தேன்.
அவன் விரலும் என் கண்ணும் சந்திக்கும் புள்ளியிலிருந்து தொடங்கியதுதான்
உனது அச்சம்.

நான் என்ன செய்ய?

என் கண்களைப் பார்த்து ஒழியாதே!
நீ புகுத்திய சட்டகத்தில் உள்ள கண்களல்ல
அவை
நாலு மூலைகளிலும் ஆணிகளால் மட்டுமே அறையப்பட்டிருக்கிறது.

4/28/2015

No comments:

Post a Comment