பலமுறை தடவிப்பார்த்து
சலித்து விட்டது.
இடங்களை மாற்றி வைத்தல் முடியாது.
தனியே நான் மட்டும்
உருவி
குறிகளை அழிக்க,
கால்களுக்கிடையில்
நீண்டு கிடந்தது
பூணூல் சுத்திய ஆண்குறி தனித்து.
எல்லோர் செயல்களையும் பார்த்து
வாய் பிளந்து போகும் எனக்கு,
வெட்கம் பட்டது
ஆச்சரியக்குறி அகற்றிய வசதி.
குறிகள் ஒழிந்து
முண்டத்தில் வெளிச்சம் பட
எல்லோருக்கும் வியப்பு.
கவட்டினுள் குறி
யாருக்குத்தெரியும்?
எக்ஸில் 8
1998
No comments:
Post a Comment