Wednesday 22 April 2015

கவிதை - கற்சுறா


நீயும் ; எனக்குள் நீயும்.




கருந்திரள் செறிவும்
திரை மறைவில் ஒளிரும் இருளும்
சிதறிப் படிகிறது கால்களின் இடுக்கு.
நீர்ச்சருகை வலிந்து வலிந்து
கால் விரல்களில் உருவ
ஓடி வழிகிறது
குருவியின் கண் நீர்.


விரல்நுனி தீண்டும்
நீரில் நனைந்து
காய்கிறது உடற்தவிப்பு.
அலையோடு மோதும் மூச்சின் உரசலில்
பீறிடும் தீ நீர்.

கருந்திரளலை விலத்தி
படிகிறது உடற்பசை.
கால்களின் நடையிடுக்கில் தவழும் மோகக் குழியில்
வெப்பக் காற்றை  உள்ளும் வெளியுமென ஊதுவதில் நிறைகிறது
சரீரத்தின் பெரு மூச்சு. 



படங்கள்: நன்றி தமயந்தி



No comments:

Post a Comment