Thursday 23 April 2015

கவிதை- கற்சுறா

கிலிசு கெட்டழிகிறது ஒரு தேசம்




பலத்த புலன்கள் பரவ விட்டு
அகத்தின் விகாசிப்பு



மனப்பிராந்தியத்தின்
கரைமுழுதும் ஈரலிக்க
அண்ணாக்கில் உருளும்
வன்னிப் புழுதியின் வரட்சி


போரையும் கூடவே சாதியையும்
கொண்டுருளும் கூட்டத்தில்
அம்மணமாய் உலாவந்தேன்.


இப்போ;
எவனுக்கோ கிலிசு தட்டிப் பினாத்துகிறான்


ஊரெல்லாம் கூடிநிற்க
பிடிமண்ணில் நிறைகிறது
மீசைமுளைக்காத புதைகுழிகள்.


அள்ளி எடுக்கும் பிடிமண்ணில்
அவர்கள் தேசம் குறைகிறது


தேசமொன்றும் இல்லாத
வெறுமையின் தரிப்பிடத்தில்
அம்மணமாய் உறங்கி
அம்மணமாய் உயிர் கொள்வேன்.


03/09/1999

No comments:

Post a Comment