வீணான பக்கம்....
கற்சுறா
அண்மையில் எனது பெயரைப் பயன்படுத்தி மாமூலன் என்ற வின்சனாலும்
நடராஜா முரளிதரனாலும் முன்வைக்கப்பட்ட கொச்சைப்படுத்தல்கள் முகநூலில் கடந்த இரண்டுநாட்களாக
எழுதப்பட்டிருக்கிறது.
அந்தக்காலத்தில் இதைத் தேனீயில் எழுதியது யார்? கனடாவில் இருந்து வந்த அந்த மின்னஞ்சலைத் தகவல் அறியும் சட்டத்தில் தரமாட்டேன் என்கிறது தேனீ!
ஆரம்பத்தில் பெரியமீன் கனடாக் கடல்மீன் என்று ஜாடைகாட்டி என்னை
அடையாளப்படுத்தினாலும் அவை இறுதிவரை எங்கு செல்கின்றது என்றே நான் வேடிக்கைப் பார்த்தேன்.
இது வெறும் ஊகங்களால் கொண்ட ஒருவகை ஐயப்பாடு என்று அதனை விட்டுவிடமுடியவில்லை.
இல்லை எனது “அல்லது இயேசுவில் அறையப்பட்ட சிலுவை” என்ற நூல் வந்ததின் வெளிப்பாடு என்றும்
விட்டுவிடமுடியவில்லை.
எனது நூலையும் சேனனது லண்டன்காரரையும் காலம் செல்வம் எப்படி செய்யமுடிந்தது என்பது இவர்களுக்கு
ஒருபக்கக் கேள்வியாக இருந்தாலும் இரண்டு பக்கத்தால் இவர்கள் தனித்தனியே ஓட்டிய வண்டியின்
பாதை அண்மையில் மூடுப்பட்டுவிட்டது என்பது பெரிய மன உழைச்சலுக்கு அவர்களை உள்ளாக்கிவிட்டிருக்கிறது
என்பதனையே என்னால் தெளிவாக உணரமுடிகிறது.( பாதை மூடப்பட்ட காரணம் பின்னர் விரிவாக எழுதுவேன்)
தற்போதைய இந்தப் பதிவிற்கு முன்னரான இவர்கள் இருவரது பதிவுகளையும் நோக்குபவர்களுக்கு
அவர்களின் ஆழ்மன உளைச்சல்களையும் அந்த உளைச்சல்களால்
இவர்கள் அவதிப்பட்டுத் திரிவதையும் இலகுவில் ஒருவர் இனம்கண்டு கொள்ளமுடியும்.
ஏதாவது ஒரு விடையம் குறித்த தமது சந்தேகங்களை ஒருவர் எழுப்புவது
நியாயமானதே. ஆனால் இவர்களோ அந்தச் சந்தேகங்களுக்கு பலருடைய பெயர்களை எந்தவித சிறிய
ஆதாரங்கள் கூட இல்லாமல் பதிவுசெய்கிறார்கள். பின்னர் அப்படி இல்லை என்றானபோது அதற்குரிய வெட்கமோ
கவலையோ படாமல் ஒரு சிறிய வருத்தம் ஒருசின்ன மன்னிப்புக் கோருதல் எதுவுமற்று தமது ஓட்டப்பந்தயம்(சவாரி) முடிந்தது என்று ஒரு அயோக்கியனின் குரலில் அறிவிக்கிறார்கள்.
ஒரு சமூக நோக்கம் கொண்டவனது செயல் ஒருபோதும் இப்படியிருக்க
முடியாது.
போதியளவு ஆதாரம் இல்லாதபோது இலக்கியத்திலும் அரசியலிலும் இப்படி
சிலேடைகள் பாவிப்பது வழமை என்று நடராஜா முரளிதரன் எழுதுவது எதனது வழித்தொடர்ச்சி?
பல்லாயிரம் மனிதர்களை தவறான ஐயங்களுடனும் தவறான தடயங்களுடனும் கொலைசெய்த தொடர்ச்சியல்லாமல்
வேறென்ன இது?
அந்தக்கொலைகளுக்கு ஒருசிறு வருத்தம் கூடப்படாத வக்கிரக் குணத்தின்
தொடர்ச்சி இலக்கியம் என்ற பெயரில் இப்போது தொடருவது அயோக்கித்தனமானது.
புலிகள் கோலோச்சிய காலங்களிலும் ஏன் அவர்களின் கடைசிக் காலங்களிலும்
கூட நடராஜா முரளிதரன் என்பவனை நான் என் அருகில் விட்டதும் இல்லை. கண்டுஒரு சிறு புன்னகை
செய்தது கூட இல்லை. மனித வதையின் தொடர்ச்சி ஒன்று அவன் முகம்மீது எனக்கு இருந்தது.
ஆனால் பாரீசிலிருந்து என்னுடன் மிக நெருக்கமாக இருந்த வின்சன்ட் என்ற மாமூலனின் தொடர்பினால்
அவன் என்னிடம் நெருங்கினான். அது அவனுக்கு மிகச் சாதகமாக இருந்தது. சிவதாசனின் காரியாலயத்தின்
வெளிவாசலில் வைத்து அவனை முதலில் சந்தித்தபோதே சொன்னேன் சபாலிங்கம் கொலை குறித்து உன்மீது
இருக்கும் சந்தேகம் எனக்கு இலகுவில் போய்விடாது என்று. ஆனாலும் எனது சந்தேகத்திற்கு
அப்பால் அதனை உறுதி செய்வது கனடியப் பொலிசாரது கடமை என்றே இப்போதும் கருதுகிறேன்.
வின்சன்ட என்ற மாமூலன் எனக்கருகில் இருந்து என்னையே அவதூறு செய்த சம்பவங்கள் மிக அதிகமுண்டு.
நான் கனடா வந்து எனது எழுத்திற்காக நான் எதிர் கொண்ட மிரட்டல்கள்
மிக அதிகமானது. எனது குடும்பத்தின் நிலை காரணமாக நான் அதனை இன்றுவரை பேசாதே இருந்தேன்.
அவை இப்போது எழுதப்படவேண்டும் என்றே நினைக்கின்றேன். இவ்வளவு
கெதியாக எழுதப்படத் தேவையானது என்று உண்மையில் நான் நினைத்திருக்கவில்லை.
காலம் பத்திரிகை குறித்தும் செல்வண்ணை குறித்தும் அல்லது இயல்விருது
குறித்தும் நான் எழுதியவை அதிகம். அண்மையில் 105.9 F.M ரமணன் என்னையும் காலம் செல்வத்தையும் உரையாடலுக்காக
அழைத்தபோது கூட காலம் பத்திரிகையை நான் என்னளவில் ஏற்றுக் கொள்ளவில்லை என்றே சொன்னேன்.
அது கடந்த காலத்தைப் பதிவு செய்யவில்லை என்பதே எனது கருத்து. அந்தக் குற்றச்சாட்டை
தனது இதழ்மீது நான் கொண்டிருக்கிறேன் என்பது அவருக்கு நன்கு தெரியும்.
நானும் அதீதாவும்
சேர்ந்து வெளியிட்ட சிற்றிதழான “மற்றது” இதழ் 1 மற்றும் 2இலும் எல்லாவற்றையும் மிக
வெளிப்படையாகவே பேசியிருப்போம். இந்த முரண்பாட்டுடனும் அதன் பின்னான ஒரு இலக்கிய மானசீக
உறவுடனும் அவரை நான் எப்போதும் நெருங்கியே இருந்திருக்கிறேன்.
எமது இலக்கிய மோதலும் சரி அரசியல் மோதலும் சரி மிகவும் வெளிப்படையானது.
நாம் புலிகளின் காலத்தில் அவர்களின் அரசியலை மொத்தமாக எதிர்த்து நின்று எழுதிய போது
மட்டுமே கொஞ்சம் அவதானமாக இருந்தோம். ஆனால் எதையும் எழுதுவதற்குப் பயப்பட்டது கிடையாது.
சபாலிங்கம் கொலைக்குப் பின் பாரீசில் அத்தனை இதழ்களும் நின்றபோது, வெளிப்படையாக புலிகளின்
அராஜகத்தை எதிர்த்துத் எழுதத் தொடங்கியது எக்ஸில்.இதழ்
நாம் கொலைக்கருவிகள் சூழ்ந்திருக்க எழுதத் தொடங்கியவர்கள். பாரீசில்
நாம் வெளியிட்ட எக்ஸில் பத்திரிகை எதிர் கொண்ட சவால்கள் மிகப் பெரிது.
இவை அத்தனையும் அனைவருக்கும் தெரியும்.
ஆனால் இத்தகை வெளிப்படையான செயற்பாடுகளை நோக்கி அசிங்கப்படுத்துகின்ற
அயோக்கியத்தனத்தின் பக்கங்களை இனிவருங்காலங்களில் என்னால் வெறும் விளையாட்டாக எடுத்துக்
கொள்ளமுடியாது.
அனைத்தையும் எழுதத் தொடங்குகிறேன். இது உண்மையில் ஒரு அசிங்கத்தனமான
பக்கம் தான் என்ன செய்வது? நண்பர்கள் பொறுத்துக் கொள்ளுங்கள். இவற்றைத் தலையில் கொண்டு திரிந்தபடி மறுபக்கம் புனைவு
எழுதமுடிவதில்லை.
தயவு செய்து தேவையானவர்கள் மட்டும் வாசியுங்கள் மற்றவர்கள் தூக்கி
எறிந்து விட்டு என்னைப் பொறுத்து மன்னியுங்கள்.
இப்போது டிசம்பர் மாதம் எனது வேலை கொஞ்சம் கடுமையானது. ஜனவரிமாதம் இதனை விரிவாக எழுதத் தொடங்குவேன்.
வீணான பக்கமெனினும் இது எனது பக்கம் என்பதால் நான் அடுத்தவனுக்குக்
கரைச்சல் கொடுக்கவில்லை என்பதை மட்டும் மனதில் நிறுத்துங்கள்.
நன்றி