Thursday 23 April 2015

கவிதை- கற்சுறா

கொலையும்
கொலைச்சிரிப்பில் கும்மாளமும்.
ஆணுறுப்பு அறுந்த வலி எனக்கு.



ஒவ்வொரு வெடித் தீர்விலும்
இறந்து கொண்டிருக்கிறேன்.




மௌனம் பொத்த
எனக்குள் சித்திரவதை
காயம் பட்டு,
உடல்
சீழ்வடிய நாறுகிறது



சாவு மணம்.



நுண்ணிய உணர்வுக் கனதி.


நிச்சயம்,
நாலு நாளாய் புழுத்தெறிக்க
மணத்த சாவு எனக்கு.


ஒரு இரவில்
அறுதலிகளாய்ப் போன
எனது பயல்களுடன் போய்ச் சேர,
எதாவதொரு தெருவில்
சாவு வரின் சுகம்

இந்த மண்ணை விட.






23/12/1997
சரிநிகர்

No comments:

Post a Comment